Friday, February 20, 2015

முத்தொள்ளாயிரம்...2

முத்தொள்ளாயிரம் பற்றி சில செய்திகள் கிடைத்ததால்  பகிர்ந்து கொள்ளலாமே என்று....


1. மூவேந்தர்களைப் பற்றிய 3 * 900 பாடல்கள், மூன்று தொள்ளாயிரம் பாடல்களைக் கொண்ட தொகுப்பு என்பது எளிதாகவே விளங்கும்.

2. "அள்ளற் பழனத்து" எனத் தொடங்கும் பாடல் சேர மன்னனை வாழ்த்திப் பாடுகிறது. அந்தச் சேர மன்னன் யாரென்று தெரிந்தால்......!?

3. அப்பாடல் "....கோக்கோதை நாடு." என்று முடிகிறது. கடைச்சங்க காலத்தின் மூவேந்தர்களின் கடைசித் தலைமுறையாக தென்னகத்தை ஆண்ட அரசகுல வாரிசுகள்.....பாண்டிய நாட்டில்- தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன்- நெடுஞ்செழியன். சோழ நாட்டில்- கோ செங்கணான் என்ற கோச்செங்கணான். கொங்கு நாட்டில்- சேரர்களின் உறவினர்களான பொறையர்களின் அரசன்- கணைக்கால் இரும்பொறை.

4. சம காலத்தில் வாழ்ந்த சேர அரசன்- குட்டுவன் சேரல்(குழந்தைப் பருவத்தில்) என்றும், கோ கோதைமார்பன் (முடிசூட்டிய பின்) என்றும் அழைக்கப்பட்டவனைத்தான் அப்பாடல் வாழ்த்திப் பாடுகிறது.

5. இந்நான்கு அரசர்களும் சமகாலத்தவர். காலம் கடைச்சங்கத்தின் இறுதிக்காலமான கி.பி.மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.

6. மேலும், இந்தக் குட்டுவன் சேரல் யாரெனில்....., சேரன் செங்குட்டுவன் மகனாவான். பரணரிடம் கல்வி கற்றவன்.

7. சேரன் செங்குட்டுவனைப் பாராட்டி பரணர் பதிற்றுப்பத்தில் ஐந்தாம்பத்தைப் பாடியபோது அவரை உக்குவிக்கும் முகமாக உம்பர்காடு எனும் ஊரின் வருவாய் முழுவதையும் பரணருக்குப் பரிசளித்ததுடன், தன்மகன் குட்டுவன்சேரலை பரணரிடம் கல்வி கற்கவும் பணித்தான்.


அவ்வளவுதான் நம்மிடமுள்ள தகவல்கள். உங்கள் பொழுது நன்றாக அமையட்டும். நன்றி.

Thursday, February 19, 2015

whatsapp-1

நீல் ஆம்ஸ்ட்ராங்...

இவர் தான் நிலவில் முதன் முதலில் கால் வைத்தவர்...

ஆனால், முதன் முதலில் வைத்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?...

பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான் நிலவுக்கு சென்ற
அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர். அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க் அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது இணை விமானி...

இவர்கள் சென்ற அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து, "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன் முதலில்
கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம். கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால், எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
தாமதிக்கவில்லை...
சில நொடிகள்தான்
தாமதித்திருப்பார்...

அதற்குள் நாசாவில் இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது, "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங் கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...

உலக வரலாறு, ஒரு நொடி தயக்கத்தில் மாற்றி எழுதப்பட்டது...
திறமையும் தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
இன்று ஆல்ட்ரினை யாருக்கும் தெரியவில்லை.

முதலாவது வருபவரைத்தான் இந்த உலகம் நினைவில் வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல... தயக்கம், பயம் இவை எந்த அளவுக்கு நம் வெற்றியை பாதிக்கும் என்பதற்கு இதுவே உதாரணம்...

இனி நிலவை பார்க்கும்போதெல்லாம் இந்தச் சம்பவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...

ஒரு நிமிடத் தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...

நாம் எல்லோருமே மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம், பயம், கூச்சம் இவைதான் நம் முதல் எதிரி...

பலருக்கு தன்னுடைய தவறுகளை கலைவதில் தயக்கம்...

தவறுகளை தட்டிக் கேட்க தயக்கம்...

அடுத்தவர்களை பாராட்டுவதில் தயக்கம்...

ஏன், சிலருக்கு இந்த தகவலை நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...

சரியானதை செய்ய தயங்கினால், தவறானதை தான் செய்ய கொண்டிருப்போம்...

எனவே, நல்ல விஷயங்களில்...

தயக்கத்தை தவிர்ப்போம்...
தலைநிமிர்ந்து நிர்ப்போம்...


Afraid some may file a case against neil Armstrong & Edwin aldrin for insulting Chandra bhagvan by planting foot on his face....that too with shoes on.