Monday, January 24, 2011

மூணு பேரு மொபைல் வாங்கப் போன கதை...4

பொற்கோ எரிச்சலடைந்து பேசியதைக் கேட்டதும் விஜ்ஜு மெல்லப் புன்முறுவல் செய்யத்தொடங்கினான். இது வழக்கமாகத் தோன்றும் கிண்டல் புன்னகை அல்ல என்பது தெளிவாகவே தெரிந்தது. அவன் ஏதோ ஒன்றை மனதில் மறைத்துக்கொண்டு பூடகமாக அர்த்தத்தோடு சிரிப்பது தெரிந்ததும், எழிலும் பொற்கோவும் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று சிறிது ஆர்வம் கலந்த கவனத்துடன் விஜ்ஜுவைப் பார்த்தனர்.

விஜ்ஜு: என்ன மச்சி...அதுக்குள்ள பொறுமை இல்லாம இப்படி பேசிட்ட?! பத்தாயிரம் ரூபாடா!
அவன் உண்மையில் பணத்தைப் பற்றியல்ல, வேறேதோ ஒன்றைப் பற்றிப் பேசவருகிறான் என்று தோன்றவே...மீண்டும் அமைதி நிலவியது.
விஜ்ஜு: டேய்...என்னாங்கடா..இப்டி silentaa இருந்தா என்ன அர்த்தம்?!
எழில்: இங்க பாரு...மேட்டர் என்னன்னு straightaa சொல்லு...சும்மா வள வளன்னு வெட்டித் தனமா பேசக்கூடாது. என்ன விஷயம் சொல்லு?
விஜ்ஜு மீண்டும் விஷமமாகப் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டே பேசத் தொடங்கினான்.
விஜ்ஜு: என்ன மச்சி (பொற்கோவைப் பார்த்து..) இப்படி ரெண்டு பேரும் பொறுமை இல்லாம, பொறுப்பில்லாமப்  பேசினா எப்படி?
பொற்கோவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.அமைதியாக இருந்தான்.
விஜ்ஜு (தொடர்ந்தான்): டேய் மச்சி...நம்ம எழிலைப் பாரு...after all ஒரு பத்தாயிரம் ரூபாய்க்கு...எவ்ளோ research பண்ணி phd பண்ணி finalize பண்ணிருக்கான்.ரெண்டு நாளுக்கு முன்னாடி நீ கேட்டுட்டு இருந்தியே? ஞாபகம் இருக்கா?
பொற்கோ 'எதைப்பற்றி' என்று கேட்பதுபோல் நிமிர்ந்து பார்த்தான்.
விஜ்ஜு: அதான் மச்சி... நான் ஏன் மதம் மாறப்போறேன்னு  கேட்டுட்டு இருந்தியே...
பொற்கோ: ஓ.. அதுவா...ம்ம்ம்.. (விருப்பமில்லாமல் பதில் சொல்வதுபோல் சொன்னான்..) மாட்டிக்கொண்டோமோ என்ற பயத்தை மறைக்க முயல்வது தெரிந்தது...
விஜ்ஜு: மச்சி...அது வேற ஒண்ணுமில்ல மச்சி... நீயே இவ்ளோ நேரம் நாங்க பேசிட்டு இருந்தத கேட்டுட்டு இருந்தல்ல..... நாம யூஸ் பண்ணப் போற, ஒரு பத்தாயிர ரூபாய் மொபைலுக்கே இவ்ளோ யோசிக்கணும்னா,  நாம follow பண்ணப் போற religion பத்தி எவ்ளோ தெரிஞ்சு இருக்கணும்?! சொல்லு.... இந்த மொபைல் புடிக்கலேன்னா அடுத்த மாசமே வேற ஒரு மொபைல் வாங்கிக்கலாம்...எத்தனை மொபைல் வேணாலும் எத்தனை முறை வேணாலும் மாத்திக்கலாம்... but religionla models ரொம்ப குறைவு...options ரொம்ப குறைவு...sooo ...... ஒரு முறைக்கு ஒன்பது முறை, நல்லா தெளிவா படிச்சி பார்த்து விசாரிச்சு தெரிஞ்சிட்ட அப்புறம்தான் இந்த முடிவுக்கு வந்தேன் மச்சி...

நாம யூஸ் பண்ணப்போற item பத்தி ரொம்ப யோசிக்கத் தேவை இல்லை...ஆனா follow பண்ணப்போற item பத்தி தெளிவா தெரிஞ்சிட்டுதாண்டா follow பண்ணனும்...இல்லன்னா புதைகுழிதான்.... ரெண்டாம் உலகப் போர்ல german மக்கள்  கொஞ்சம் யோசிச்சு இருந்தா அவங்க ஹிட்லரை follow பண்ணிருக்க மாட்டாங்க.... ஜப்பான் மக்கள் டோஜோவ follow பண்ணி அணுகுண்டுக்கு பலி ஆகிருக்க மாட்டாங்க...இப்ப கூட பாரு...  al qaedaவ follow பண்ணிதானே twintowersஐ இடிச்சு 5000 பேருக்கு மேல செத்தாங்க அதோட terroristsசும் செத்துப்போனாங்க...அவ்ளோ ஏண்டா... நம்ம மும்பை தாஜ் terrorist அட்டாக்ல வந்த terrorists எல்லாம் ரொம்ப ரொம்ப dedicated followersதான்....ஒருத்தன்தான் உயிரோட இருக்கான் இப்ப... அவனுக்கு இப்ப வாழ்றதே நரகமாத்தான் இருக்கும்...எப்போ தூக்குல போடுவாங்க...ன்னு பயந்து போய் இருப்பான்... அவன் நல்ல வழிய follow பண்ணிருந்தான்னா இன்னிக்கு இப்படி வந்து மாட்டிட்டு இருக்க மாட்டான்.... அதும் கொலைகாரனா... அதனால... follow பண்றதுக்கு முன்னால... worthஆன்னு analyse பண்ணிதான் follow பண்ணனும் மச்சி...

அதுமட்டுமில்ல மச்சி... நட்டு(nataraj) கடைல கத்தரிக்கா கருவேப்பில வாங்கும்போது எவ்ளோ டெஸ்ட் பண்ணி வாங்குற நீ?! தட்டிப்பாக்குறதும்.... திருக்கிப் பாக்குறதும்...கிள்ளிப்பாக்குறதும்....கீரிப்பாக்குறதும்...உருட்டிப் பாக்குறதும்...ஒடச்சுப் பாக்குறதும்...எப்டில்லாம் காய் வாங்குற?! டேய்....சாப்டுற காய்கறி சரி இல்லைனா... கக்கூசு மட்டும்தாண்டா நாறும்.... ஆனா நம்ம follow பண்ற philosophy சரி இல்லைனா வாழ்க்கையே நாறிடும் மச்சி.... தெரிஞ்சுக்கோ...

ஹிந்துஇசம் எனக்கு ஏன் புடிக்கலைனா அதுல இருக்க விஷயம் அப்படி... அண்ணாவோட "கம்பரசம்" படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் ஹிந்துஇசத்துல இருக்க principles(கொஞ்சம் அழுத்தமாகச் சொன்னான்) பத்தி கொஞ்சம் தெரியவர ஆரம்பிச்சது...அப்படியே நீதிதேவன் மயக்கம் படிச்சப்போ.....chieeeeeee ன்னு போச்சு...அப்புறம் மாஜி கடவுள்கள்... படிச்சப்புறம் சுத்தமா மரியாதை போய்டுச்சு...நீயும் படிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்....தெரியக்கூடாதுன்னுதானே உனக்குப் புரியாத languageல so-called தேவபாஷைல எழுதி வச்சிருக்கானுங்க....விஷயம் தெரிஞ்சு ஒருவேள நீ மனுஷனாகிட்டா அப்புறம் அவனுங்களுக்கு ஒரு நல்ல அடிமை மிஸ் ஆகிருவான்...
பெரியார் புக்ஸ் படிச்சா தெரியும்.... ஹிந்துஇசம் மூடிவச்ச சாக்கடைன்னு....
நம்ம ஊருல சொல்லுவாங்களே... "தாழம்பூ கொண்டையாம்...உள்ள பார்த்தா ஈரும் பேனுமாம்னு"...அது perfectaa பொருந்துது.... உள்ள பாருங்கன்னு தானே சொல்றேன்....

எழில்: டேய்...டேய்...போதும்டா...பாவம் பொற்கோ...இப்பவே வாந்தி பேதி வந்துடும் போல இருக்கு...இப்பிடி புடிச்சு ராக்கிங் பண்ணிட்டு வர அவர?!
பொற்கோ (சுதாரித்துக் கொண்டு..): யோவ் விஜ்ஜு....போதும்யா....அடுத்த " நித்யானந்தா" நீதான் மச்சி....போதுமா?! enjoyyyyyy.... என்னை ஆள விடு....முடியல...

வாஷி நெருங்கி விட்டிருந்தது...அவர்கள் இறங்க ஆயத்தமாகினர்.

No comments: