Friday, April 1, 2016

kalabhras களப்பிரர் - 3 - list of literary works


i took this list from the same book "களப்பிரர் ஆட்சியில் தமிழகம்". ( also mentioned in 1st part of this title- " kalabhras களப்பிரர்- 1 " )

this list includes the works produced during kalabhra's reign from 250AD to 600AD.

யாப்பிலக்கண நூல்கள்:
1. அவிநயம் 
2. அவினயப்புறனடை (எ) நாலடி நாற்பது
3. காக்கைப் பாடினியம் 
4. நத்தத்தம் 
5. பல்காப்பியம் 
6. பல்காப்பியப் புறனடை 
7. பல்காயம் 

இலக்கிய நூல்கள்:
1. நரி விருத்தம்* 
2. எலி விருத்தம்*
3.கிளி விருத்தம்* 
4. சீவக சிந்தாமணி* 
5. விளக்கத்தார் கூத்து* 
6. பெருங்கதை*
 * சமண ஆசிரியர்கள் எழுதியவை.

7. மூத்த திருப்பதிகங்கள் 
8. திருவிரட்டை மணிமாலை# 
9. திருவந்தாதி# 
10. கயிலை பாதி காளத்தி பாதி திருவந்தாதி# 
11. திரு ஈங்கோய்மலை எழுபது# 
12. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை# 
13. திருவெழு கூற்றிருக்கை# 
14. பெருந்தேவபாணி# 
15. கோபப்பிரசாதம்# 
16. காரெட்டு# 
17. போற்றிக்கலி வெண்பா# 
18. திருக் கண்ணப்பதேவர் திருமறம்# 
19. மூத்தநாயனார் இரட்டை மணிமாலை# 
20. சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை#
21. சிவபெருமான் திருவந்தாதி#
# சைவர்கள் இயற்றியவை.

22. திருக்குறள்$ 
23. களவழி நாற்பது$ 
24. முதுமொழிக் காஞ்சி$ 
25. நான்மணிக் கடிகை$
26. இன்னா நாற்பது$ 
27. இனியவை நாற்பது$ 
28. கார் நாற்பது$ 
29. ஐந்திணை ஐம்பது$ 
30. திணைமாலை ஐம்பது$ 
31. திணைமாலை நூற்றைம்பது$ 
32. திணைமொழி ஐம்பது$ 
33. ஐந்திணை எழுபது$
34. திரிகடுகம்$ 
35. ஆசாரக் கோவை$ 
36. சிறுபஞ்ச மூலம்$ 
37. ஏலாதி$ 
38. கைந்நிலை$
39. நாலடியார்$
$ - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள். பதினெண் == 18; கீழ்க்கணக்கு == இம்மையை, இவ்வுலக வாழ்வைப் பற்றியது.

மொத்தமுள்ள 18 நூல்களில், 14 நூல்கள் களப்பிரர் காலத்தில் இயற்றப்பட்டவை. இந்தப் பட்டியலில் முதல் 3 மூன்று நூல்கள் களப்பிரர் ஆட்சிக்கு முன்பும், கடைசி நூல் களப்பிரர் ஆட்சிக்குப் பின்பும் எழுதப்பட்டவை.

இத்தனை நூல்கள் படைக்கப்பட்டிருந்தாலும், களப்பிரர் காலம் நீலகண்ட சாஸ்திரிக்கும் அவனது ஜால்ராக்களுக்கும் இருண்ட காலமே!

காரணம் - களப்பிரர்கள் அனைத்து மதங்களுக்கும் சம உரிமை கொடுத்ததால்; சைவ வைணவ வைதீக மதங்களுக்கு மட்டும் சிறப்பு முன்னுரிமை கொடுத்து யாகம், வேள்வி செய்து மக்களை ஏமாற்றி அவர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்திப் பிழைக்கும் இந்தச்சுயநலக்  கூட்டத்துக்கு தாழ் பிடித்துத் தானங்கள் கொடுக்காததால்.

அரசியல் காரணம் - களப்பிரர் பெரும்பாலும் வீழ்ந்துகொண்டிருந்த குறிஞ்சி, முல்லை நில மக்களின் ஆதரவை மட்டும் கொண்டிருந்ததும், வளர்ந்துவரும் மருதநில மக்களின் ஆதரவைப் பெறாததும் கூட.

No comments: