Monday, February 28, 2011

பயணம்-1 - திருவாரூர் நோக்கி...

பிப்ரவரி 23ல் நமது வகுப்புத் தோழன் பிரவீனின் திருமணம் திருவாரூரில் நடந்தது. நானும் கலந்துகொள்ளச் சென்றேன். திருவாரூருக்கு எனது முதற்பயணம் என்பதாலும் இந்த இணையப் பதிவலைப் பக்கத்தில் எழுத ஏதேனும் விஷயம் கிடைக்க வேண்டும் என்பதாலும் இந்தப் பயணத்தில் சிலபல புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் எடுத்து வைத்துக் கொண்டேன். அவைகளை ஹ்ம்ஹ.ஹ்ம்ஹ... அடுத்த பதிவில் இடலாம் என்று இருக்கிறேன். என்னுடைய மாமனார் வீட்டில் இருக்கும் கணினி (512 MB DDR -1 RAM , P-IV 2.8 GHz) என்னுடைய காமெராவை சப்போர்ட் செய்யவில்லை... இந்தச் சிறு பதிவை எழுதுவதற்குள் 17 முறை இணையத் தொடர்பு அறுந்ததும் காரணம். விசாகப்பட்டினம் சென்றதும் பயணம் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அதுவரை பார்வையாளர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைக் கூறி விடைபெறுகிறேன்.

No comments: